Categories: இந்தியா

நாளை நாடு முழுவதும் போராட்டம்.. காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Congress: வருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், வருமான வரி கணக்கை முறையாக செலுத்தாத கட்சிகளுக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

அந்தவகையில், காங்கிரஸிடம் சுமார் ரூ.1,800 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் இதனால் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து வருமான வரி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த கோரி காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ரூ.1,823 கோடி வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு எதிராகவும் 135 கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்ததற்கு எதிராகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த கோரி  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசே வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

27 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

31 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

49 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

52 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

52 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago