ராகுல் காந்தியின் பயணம் ரத்து என காங்கிரஸ் அறிவிப்பு!

ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை ஸ்ரீபெரும்பத்தூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் ரத்து. 

ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி நாளை (மே21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ரத்து செய்யப்படுவதாக என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி பெங்களூரு வந்தடைந்தனர். பதவியேற்பு விழாவிற்கு பெங்களூரு வந்த ராகுல், பிரியங்காவை டிகே சிவகுமார் வரவேற்றார். இந்த நிலையில், நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.