படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி தூவல் தீரம் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகானது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ தற்போது ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது .. இந்த குழுவினருடனான ஆலோசனைக்கு பிறகு கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய விசாரணைகுழுவானது விபத்து குறித்த விசாரணை நடத்தும் என குறிப்பிட்டார்.
மேலும் , விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கும் எனவும் , சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவச் செலவை அரசே முழுதாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் கூறினார். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி இறந்தவர்கள் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…