மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடித்தால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்காது என டெல்லி முதல்வர் ட்வீட்.
மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் போதல் போக்கில் மத்திய அரசு உள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைவருடனும் மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடித்தால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்காது.
மத்திய அரசு தங்களின் வேலைகயை செய்ய வேண்டும், மற்றவர்களை அவர்களின் வேலையை செய்ய விட வேண்டும் என்றும் மற்றவர்களின் வேலைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது எனவும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.