வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து பயணம்..! வெளியாகிய தகவல்

இந்திய கிரிக்கெட்டர் பும்ரா அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து சென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பும்ரா ஆசியா கோப்பை தொடரிலும், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

காயம் குணமானதாக நினைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒருநாள் தொடரில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. தொடரின் நடுவே வலியால் வெளியேற்றப்பட்ட பும்ராவை சோதனை செய்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியூசிலாந்து சென்றுள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், வருகிற மார்ச் 31 அன்று தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment