#BREAKING : ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. 

கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

ராகுலை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் 

இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை 

அதன்படி, பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு  ஜாமீனும் வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை அறிவிக்க பட்டபோது சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment