#BREAKING: உக்ரைனுக்கு மேலும் 26,000,00,00 ரூபாய் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடிக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு.

ரஷ்யா மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி நிதியுதவியாக வழங்க அமெரிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து அறிவித்திருந்தது. அதாவது, உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக சுமார் ரூ.1900 கோடி வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு, கல்விக்கு உதவ சுமார் ரூ.2600 கோடி வழங்கப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.