#BREAKING : திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது -வழங்கப்படும் அமைச்சர் சாமிநாதன்

தமிழ்த்துறையில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என அறிவிப்பு.

இன்று சட்டப்பேரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அமைச்சர் சாமிநாதன், 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது, தமிழ்த்துறையில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி ஒவ்வொரு ஆனதும் ஜூன்-3 ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்றும், இந்த விருதுடன் நினைவு பரிசும், ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டே தமிழ்த்துறையில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.