#BREAKING :காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.! 144 தடை உத்தரவு.!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம்  அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இதனையடுத்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி அனுமதி டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். மேலும் போராட்டம் நடக்கவிருந்த ராஜ்காட் பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment