#BREAKING: பொங்கல் பரிசில் கரும்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு!

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், கரும்பு வழங்கலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்று முன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், பரிசுத்தொகுப்பில்  ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரையுடன் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஜனவரி 2-ஆம் தேதிக்கு பதில், 9-ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

26 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

30 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

48 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

51 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

51 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago