#Breaking: ஊரடங்கை மீறிய 2,71,389 பேர் கைது.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 994 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.