ஏற்கனவே இரண்டு 3-வதாக ஆண் பொம்மையை திருமணம் செய்ய விரும்பும் பாடிபில்டர்..!

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்சோ என்ற பாடிபில்டர் ஏற்கனவே இரண்டு பொம்மைகளை திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது மேலும் ஒரு ஆண் பொம்மையை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யூரி முதலில் மார்கோ என்ற பொம்மையை கடந்த ஆண்டு எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் மார்கோவை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். யூரி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த வினோத திருமணம் நடந்தது.

ஆனால், கடந்த ஆண்டு கிறிஸ்மஸ்க்கு சில நாட்களுக்கு முன்பு, மார்கோ “உடைந்து” பழுதுபார்க்க அனுப்பப்பட்டது. பின்னர், யூரி  மார்கோவை “மோசடி” விசித்திரமான பொருள் என்று குற்றம் சாட்டினார். அதன் பிறகு மார்கோவை விவாகரத்து செய்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், யூரி தனது புதிய மனைவியான லோலா என்ற  பொம்மையை திருமணம் செய்தார்.

“லோலாவுடன் உடலுறவு கொள்வது குறித்து நான் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் “நான் மார்கோவிலிருந்து விவாகரத்து பெற்றேன். ஆனால் விவாகரத்துக்கான காரணங்களைப் பற்றி இப்போது நான் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

சமீபத்தில் FUBAR வானொலியில் ‘தி டேட்டிங் ஷோ’வில் பேசும்போது மற்றொரு திருமணத்தை செய்ய திட்டமிடுவதாக யூரி டோலோச்சோ கூறினார். மேலும், நான் எதிர்காலத்தில் ஒரு ஆண் பொம்மை திருமணம் செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு ஆண் பொம்மை மற்றும் லூனாவை திருமணத்தை செய்ய விரும்புகிறேன். இது திருமணம் அல்ல என்றும் ஆனால் திருமணம் போன்று இருக்கும் என்று கூறினார்.