தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனவே தேசதுரோக வழக்கில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வது, செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு, பழனியப்பன் மீதான பழைய வழக்கை தோண்டி போலீஸை விட்டு தேடவிட்டது என தினகரனின் ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். தினகரன் ஆதரவாளர்களை மிரட்டுவதற்கு காவல்துறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வருக்கும் ஆட்சிக்கும் எதிராக தினகரனும் அவரது ஆதரவாளர்களும் பேசாமல் இருப்பதற்காக அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அந்தவகையில் தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…