இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 97/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 50 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக டேவிட் வார்னர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். வார்னரை அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே (18 ரன்கள்), அஸ்வின் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், அஸ்வின் வீசிய பந்தில் ஸ்ரீகர் பாரத், கேட்ச் அவுட் ஆகி வந்த வேகத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். பின் டிராவிஸ் ஹெட், 12 ரன்கள் எடுத்து ராகுலின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டி போல் விளையாடி வரும் உஸ்மான், 8 போர்கள் மற்றும் 1 சிக்ஸருடன் 53 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 2 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்களை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…