BGT2023: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்; தேநீர் இடைவேளையில் 149/2 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 149/2 ரன்கள் குவிப்பு.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி  நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு க்வாஜா-டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட்(32 ரன்கள்), லபுஸ்சான்(3 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்க, அதன் பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்(38* ரன்கள்) எடுக்க உஸ்மான் க்வாஜா(65* ரன்கள்) அரைசதமடித்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர்களை விக்கெட் எடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இன்னும் பலன் ஏதும் கிடைக்கவில்லை, தற்போது தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 38* ரன்கள் மற்றும் உஸ்மான் க்வாஜா 65* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Leave a Comment