இளையராஜா மகள் பவதாரிணி உடல் அம்மா, பாட்டி நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பவதாரிணி மறைவு
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்
இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.
தேனியில் நல்லடக்கம்
பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது. இங்கும் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். குறிப்பாக பாரதி ராஜா, இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலரும் வந்தனர்.
நல்லடக்கம்
இந்த நிலையில், பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…