ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி.! தமிழக முதல்வர் கோரிக்கை.. கேரள அரசு நடவடிக்கை.!

ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் – இந்திய கூட்டணி எம்.பி-க்கள் இன்று ஆலோசனை..!

இந்த நிலையில், அங்கு வரும் பகதர்கள் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து தமிழக முதல்வர், கேரளா அரசிடம் தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.