#BREAKING: துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கம்..!

50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றார். 50மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இதனால் இந்தியாவிற்கு 12-வது பதக்கம் உறுதியானது. ஏற்கனவே அவனி லெகாரா 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி , 4 வெண்கலம் வென்றுள்ளது. இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளது.