AUSvIND:கடைசி டி20…!இந்திய அணி வெற்றிபெற 165 ரன்கள் நிர்ணயித்தது ஆஸ்திரேலியா…!

இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா   4 விக்கெட் எடுத்தார்.

இதனால்  இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

Leave a Comment