மக்களே கவனம்.. ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 23 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று தொற்று பாதிப்பு 10,093 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,720 லிருந்து 57,542 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 5,31,091 லிருந்து 5,31,114 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,48,08,022 லிருந்து 4,42,29,459 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,26,324 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 807 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment