Arvind Kejriwal : டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என வாதிட்டது.
மேற்கண்ட காரணங்களை குறிப்பிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 10 நாள் நீதிமன்ற காவல் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இதனை எதிர்த்து வாதிட்ட கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அரவிந்த் கேஜிரிவால் மீது அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அமலாக்கத்துறை தன்னிச்சையாக முன்வந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும், இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு முதலமைச்சரை இவ்வாறு கைது செய்துள்ளனர் என கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிச்சயம் நீதிமன்ற காவல் விதிப்போம் என கூறிய நீதிபதி அமர்வு, பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28வரையில் 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து உத்தரவிட்டது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…