நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதற்கிடையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பெய்த  கனமழை காரணமாக தேர்வுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 6 முதல்10ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11-ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என நெல்லை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்அறிவித்துள்ளார்.