Ankita Lokhande : சினிமாவில் இருக்கும் நடிகைகள் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாகவே பேசுவதை நாம்பார்த்திருப்போம் . அப்படி பல நடிகைகள் இன்னும் வரையுமே வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் ஹிந்தி சீசன் 17 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அங்கிதா லோகண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க என்று வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சினிமாவில் நடிக்க அதிகமாக ஆர்வம் இருந்த காரணத்தால் தென்னிந்தியத் திரையுலகில் ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். ஆடிஷன் முடிந்த பிறகு எனக்கு கால் வந்தது நீங்கள் செலக்ட் ஆகி உள்ளீர்கள் என்று கூறினார்கள். இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதை அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தேன். ஆனால், எப்படி அவ்வளவு எளிதாக தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.
இருந்தாலும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனவே அந்த நாள் முழுவதும் நான் தூள்ளி குதித்துக்கொண்டு இருந்தேன். பிறகு நடிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துப் போட வர சொன்னார்கள். அப்போது என்னுடன் வந்தவரை வெளியில் இருக்கச் சொன்னார்கள். உள்ளே சென்றதும் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொன்னார்கள்.
இதனை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அப்போது எனக்கு 19 வயது தான். என்னை ஹீரோயினாக்குவதில் என்ன அட்ஜஸ்ட்மென்ட் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்காக தயாரிப்பாளருடன் ஒரு இரவைக் கழிக்கச் சொன்னார்கள். அப்புறம் நினைக்கிறேன்.. உங்க தயாரிப்பாளருக்கு திறமை தேவையில்லை.. பக்கத்துல ஒரு பொண்ணுதான் வேணும் என்று பிறகு முடியாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இது தான் தன்னுடைய வாழ்விலே மறக்க முடியாத சம்பவம் என்றும் அங்கிதா லோகண்டே கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அங்கிதா லோகண்டே தற்போது சுதந்திர வீர் சாவர்க்கர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…
சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…