Anant Ambani: இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, உலக அளவிலான தொழிலதிபர்கள், அரசியல், சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தார், இயக்குநர் அட்லி அவர் மனைவி ப்ரியா உள்ளிட்டோரும் இதில் கலந்துக் கொண்டனர். இந்த நிலையில் திருமணக் கொண்டாட்டத்தின் போது ஆனந்த் அம்பானி Patek Philippe Sky Moon Tourbillon வாட்ச் அணிந்திருந்தார்.
இதன் விலை ரூ. 63 கோடி ஆகும். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது, ஆனந்த் அம்பானியின் வாட்ச் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவர் மனைவி பிரிசில்லாவையும் பெரியளவில் ஈர்த்துள்ளது, அதை அவர்கள் ஆச்சரியாக பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், ’கடிகாரம் மிக அருமையாக உள்ளது, நான் அதை விரும்பலாம் என வீடியோவில் பிரிசில்லா கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரியளவில் வைரலாகியுள்ளது.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting' என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…
சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம்…
சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல்…
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…
சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…