மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும். – ஏர் இந்தியா.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை மேலும் நீட்டித்து வரும் 31ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதனால், பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான விமான சேவையும் மே 31 வரை கிடையாது. மேலும் அதன் பிறகான விமான சேவை முன்பதிவுகளும் தற்போது கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அடுத்து அறிவிக்கும் வரையில் விமான சேவைக்கான முன்பதிவு கிடையாது என ஏர் இந்தியா திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…