ஒன்றிய அரசுக்கு பயந்து பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக – சேகர் பாபு

மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது என சேகர்பாபு பேட்டி. 

சென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது; அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்; ஒன்றிய அரசுக்கு பயந்து பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக என விமர்சித்துள்ளார்.

Leave a Comment