மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய அதிமுக..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இன்று மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு  மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்,  அதிமுக மணப்பாறை நகராட்சியை கைப்பற்றியது.

மொத்தமுள்ள 27 வார்டில் திமுக மற்றும் அதிமுக தலா 11 இடங்கள், சுயேச்சைகள் 5 இடங்களில் வென்ற நிலையில், மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் 15, திமுக வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றனர். இதனால், சுயேட்சைகளின் ஆதரவில் மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றார்.