[file image]
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நிறுத்தப்பட்ட லாரி மீது மினி வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அகமதாபாத் அருகே பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில், பஞ்சர் காரணமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி டிரக் மோதியதில், கேடா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 10 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் நோக்கிச் சென்ற மினி வேனில் மொத்தம் 23 பேர் பயணம் செய்தனர், அதில் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்த நிலையில், இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இதுகுறித்து அகமதாபாத் ரூரல் எஸ்பி அமித் கூறுகையில், பாவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் மினி லாரி மற்றொரு லாரி மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. RTO மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகியவையும் இதில் ஈடுபட்டுள்ளன. அகமதாபாத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்த விபத்தை அடுத்து பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா – பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாவும் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…
பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…