ஆப்கானிஸ்தான் மசூதி தாக்குதல் – முக்கிய குற்றவாளி கைது ..!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அப்துல் ஹமீது சங்கார்யார் என்பவர் தாலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும், இந்த தாக்குதலுக்கான முக்கிய காரணமாக இவர் தான் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.