ADMK Person M Shanmugam [File Image]
சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார்.
அப்போது சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகில் வந்து கொண்டு இருக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சண்முகத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சண்முகம் ,கடந்த 2011 முதல் 2016 வரையில் கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் , சண்முகம் குடும்பத்தினர், அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சண்முகம் ஆதரவாளர்கள் உடலை அங்கிருந்து அகற்ற மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
பின்னர் , சண்முகம் ஆதரவாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சண்முகத்தின் உடலை அங்கிருந்து அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சேலம் மாநகர காவல்துறையினர் தற்போது கொலையாளிகளை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…
மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…