Ritika Singh நடிகை ரித்திகா சிங் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பாக்சிங் போட்டியாளர். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். அந்த திரைப்படத்திலும் அவருக்கு ஏற்ற கதாபாத்திரமான பாக்சிங் விளையாடும் பெண்மணி கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது.
READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
அந்த கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடிக்க முடியுமோ அதே அளவிற்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா மற்றும் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். கடைசியாக கிங் ஆப் கோதா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா சிங் விளையாட்டை மட்டும் விடவே மாட்டேன் என்று கூறியுள்ளார். என் வாழ்க்கையில் சினிமாவில் நான் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறேனோ அதேபோலத்தான் விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகிறேன். என் வாழ்க்கையில் சினிமாக்கும் விளையாட்டுக்கும் ஒரே அளவில் தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறேன்.
READ MORE – நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!
என்னை பொருத்தவரை பெண்கள் பலருமே விளையாட்டுக்கு வர வேண்டும் . இது உங்களை உடல் அளவிலும் மனதளங்களும் வலிமையானதாக மாற்றும். எனவே தயவு செய்து விளையாடலாம் என்ன ஆனாலும் சரி நான் விளையாட்டை மட்டும் விடவே மாட்டேன்” எனவும் ரித்திகா சிங் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு விளையாட்டின் மீது இவ்வளவு பிரியம்மா? என்பது போல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…
மேலும் நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசி அவர் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறது. ரஜினி சார் போன்ற ஒரு பெரிய ஸ்டாருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ‘ என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.