இந்தியா

ஆவிகளுடன் பேசிய மனைவி? சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்த கணவன்!!

ராஜஸ்தான் : மாநிலத்தில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் லால் என்பவர் தனது மனைவி தேவி மற்றும்  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவி, லால் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் செவ்வாய்க்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது, புதன்கிழமை 2:30 மணியளவில் மனைவி தேவி  ஆவிகளுடன் தொலைபேசியின் மூலம் பேசுவதாக லாலுக்கு சந்தேகம் வந்துள்ளது. பின் தூங்கி கொண்டு இருந்த மனைவி தேவி யை கோடரியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு, தம்பதியரின் 17 வயது மகள் சுமித்ரா தந்தை லாலை தடுக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் , லால் கொடூரமாக தாக்கி கொண்டு இருந்தார். இதனால் மகள் சுமித்ராவுக்கும் காயம் ஏற்பட்டது .

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ​​தாய்-மகள் இருவரும் பலத்த காயம் அடைந்து கீழே கிடைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்த தகவலை தெரிவித்துவிட்டு  பாதிக்கப்பட்ட  தேவி மற்றும் சுமித்ராவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவலை தெரிவித்தார்கள்.  சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமித்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் லாலை கைது செய்தனர்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

5 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago