என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் புகைப்படம் வெளியானது..!

  • குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும்.
  • இதை தொடர்ந்து  4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.
  • என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி புதன் கிழமை இரவு  கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தனர்.பின்னர் பிரியங்காவின் உடலை கட்டப்பள்ளி என்ற இடத்தில்  உள்ள பாலத்திற்கு அடியில் உடலுக்கு தீ வைத்தனர்.

இந்த சம்பவம் நாடு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக  முகமது ஆரிப் (26) , ஜொள்ளு சிவா (20),  நவீன் (20),  சின்னகேஷ்வலு(20) ஆகிய  நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி  நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். பொதுவாக குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும். இதை போலீசார் விசாரணை அறிக்கையில் சேர்ப்பார்கள்.

இதை தொடர்ந்து  4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கு 6 போலீசார் சென்று உள்ளனர்.அப்போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக  நான்கு பேரையும் போலீசார்  என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.