தமிழ்நாடு

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.. 10 ஆண்டுகள் சிறை.! தமிழகத்தில் புதிய சட்டம்.!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அந்தந்த துறை அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச்சட்டம் 1937இல் திருத்தம் கொண்டுவரும்படியாக இந்த சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. இதில், கள்ளசாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையாக இதில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, கள்ளச்சாராயம் தயாரித்து அதனை விற்பனை செய்தால் குற்றம் சட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய வழக்கில் ஜாமீன் முறிவினை நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரமளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Recent Posts

மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக…

22 mins ago

வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற…

35 mins ago

இதோட நிறுத்திக்கோங்க…AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்.? தேமுதிக முக்கிய அறிக்கை.!

விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு…

51 mins ago

வாகனங்கள் மீது வேகமாக மோதி சென்ற பள்ளிப்பேருந்து !வைரலாகும் வீடியோ!

ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான…

52 mins ago

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான்…

60 mins ago

10 ரூபாய் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

மும்பை : ரிக்‌ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை  கடுமையாக ரிக்‌ஷா…

1 hour ago