கமல்ஹாசனுடன் பல படங்கள்…அதனால? கேள்விக்கு கடுப்பான ஜெயசுதா!

Jayasudha சினிமா துறையில் பொதுவாகவே ஒரு நடிகை ஒரு நடிகருடன் தொடர்ச்சியாக படங்களில் நடித்தாலே அவர்களுக்குள் காதல் இருப்பதாக வதந்தியான தகவல் பரவிவிடும். அந்த வதந்தி தகவலுக்கு நடிகைகளும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருந்த நடிகை ஜெய சுதா அந்த மாதிரி கேள்விகளுக்கு சற்று கடுப்பாகியுள்ளார்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

350 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை ஜெயசுதா நடிகர் கமல்ஹாசனுடன் அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும் 1979, இடி கதை காடு, மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டு ராஜா, ஆயிரத்தில் ஒருத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த காரணத்தால் அந்த காலத்தில் அவர் கமல்ஹாசனுக்கு அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

இது தொடர்பான கேள்விக்கு நடிகை ஜெயசுதா சமீபத்திய பேட்டி ஒன்றில் சற்று கோபம் அடைந்துள்ளார். இது குறித்து பேசிய ஜெயசுதா ” நான் சினிமாவில் ஹீரோயினாக படங்களில் நடித்து கொண்டிருந்த அந்த காலத்தில் பாலசந்தர் எடுத்த பல படங்களில் கமலுடன் சேர்ந்து நடித்தேன்.உண்மையில் கமல் ஒரு நல்ல பாடகர் நானும் அவருடன் சேர்ந்து பாடுவது வழக்கம். அந்த நேரத்தில் எங்கள் ஜோடி நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள்.

எனவே, அந்த சமயம் தொடர்ச்சியாக நாங்கள் ஒன்றாக நடித்து கொண்டு இருந்த காரணத்தால் நிஜத்திலும் இவர்கள் ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் நினைத்து இருக்கலாம். என்னையும் அவரையும் பற்றி அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். பத்திரிக்கையாளர்கள் ஏதாவது எழுதாவிட்டால் என்ன செய்வது என்று தெரியாது. அவர்கள் அப்படியெல்லாம் எழுதபோய்தான் இது இதுபோன்ற வதந்தி பரவ முக்கிய காரணத்துக்கு வழிவகுக்கும்.

read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

நிஜமாகவே பல ஹீரோயின்கள் இப்படி பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் பேட்டிகளில் எதிர்கொள்வதன் காரணமாக தான் பேட்டி கூட கொடுக்கமாட்டிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் பெரிய நடிகை என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதுபோன்ற எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்ல மாட்டேன்” எனவும் ஜெயசுதா தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் தற்போது அம்மா, பாட்டி என முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment