ஜெயலலிதா இருக்கும் போது இப்படி பேசியிருந்தால் ரஜினிகாந்த் நடமாடி இருக்க முடியுமா..?அமைச்சர் ஜெயக்குமார்..!!

நேற்று மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிநிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் ரஜினிகாந்த்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் ரஜினி பேசியது குறித்து கொறினார் அதில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசுவது ஆரோக்கியமில்லை. கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பது காட்டுகிறது. அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது.திரைப்பட சூட்டிங்கும், அரசியல் மீட்டிங்கும் ஒன்றல்ல,திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீது புகார் கூறுகிறார் ரஜினி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருக்கும் போது முரணான கருத்துக்களை பேசிவிட்டு ரஜினிகாந்த் நடமாடி இருக்க முடியுமா ?எம்ஜிஆர், ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசக்கூடாது.அரசியல் பண்பாடு காரணமாகவே திமுக தலைவர் வீட்டுக்கு சென்றோம்  என்று  கூறினார் மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், காந்தி மண்டபத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
DINASUVADU

Leave a Comment