தஞ்சையில் பரபரப்பு.! பாஜக, விசிகவினர் இடையே தகராறு.! சாலை மறியல்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக மற்றும் விசிக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

அப்போது, பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது , இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டவுடன் இரு தரப்பும் அப்பகுதி சாலையை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து சிறுது நேரம் பாதிக்கப்பட்டது.

 

Leave a Comment