ஜம்மு காஷ்மீரரில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி 12 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர் விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர்.

சூரன்கோட் பூஞ்சில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ரலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்த ஒரு நாள் கழித்து இந்த விபத்து நடந்துள்ளது.

Leave a Comment