Today Live : N.I.A சோதனை முதல்… மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத்தீ வரையில்….

Today Live 10 02 2024

இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….

சென்னை சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.! 8 பேர் உயிரிழப்பு.!

Accident in Nellore

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த … Read more

அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்.! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.! 3 பேர் உயிரிழப்பு.! 20 பேர் காயம்.!

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

#Accident : அரசுப்பேருந்து தீப்பிடித்து விபத்து.! 2 பேர் உயிரிழப்பு.! வெளியான பரபரப்பு வீடியோ..!

நாசிக் அருகே ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இருவர் இறந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா: நாசிக்-ல் உள்ள சின்னார் நெடுஞ்சாலையில் ஷிண்டே-பால்ஸ் சுங்கச்சாவடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் மற்ற வாகனங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்தானது அங்கிருந்த மற்ற பைக்குகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சிகள் மீட்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்த … Read more

ஆமை போல் கவிழ்ந்த பேருந்து..! 17 பயணிகள் காயம்-ஜம்மு காஷ்மீர்..!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜாரி என்ற இடத்தில் திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்களில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜோரி மாவட்டத்தின் தர்குண்டி எல்ஓசி சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டு அங்குள்ள ஜிஎம்சி ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த 17 பேரில் … Read more

#Breaking:ஜார்கண்டில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலி,பிரதமர் மோடி இரங்கல்

சனிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்று ஹசாரிபாக் எஸ்பி தெரிவித்தார். பேருந்து விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Anguished by the loss of lives in the … Read more

ஜம்மு காஷ்மீரரில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி 12 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர் விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். சூரன்கோட் பூஞ்சில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ரலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 … Read more

இமாச்சல பிரதேசம் பேருந்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு..! பிரதமர் இரங்கல்..!

இமாச்சல பிரதேசம் பேருந்து விபத்த்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல். இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில், நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில், தனியார் பேருந்து ஒன்று, பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் … Read more

#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this … Read more