மூன்று நாட்களுக்குள் யெஸ் வங்கி நிலைமை சீராகும் – நிதியமைச்சர்

வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில், யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், யெஸ் வங்கியின் 49% பங்குகளில் முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் 3 நாட்களுக்குள் யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகும் என குறிப்பிட்டார்.