நயன்தாரா மீது வெறுப்பில் தெலுங்கு திரையுலகம்?! காரணம் என்ன?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் அனுஷ்கா ஜான்சிராணி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும், விஜய்சேதுபதி, சுதீப், அமிதாப்பச்சன் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது. இப்படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அண்மையில் நடைபெற்றது. இந்த ட்ரெய்லரில் ரிலீசிற்கு  தெலுங்கு முன்னணி நடிகர்களும் தமிழில் விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆனால், நயன்தாரா மட்டும் வரவில்லை. அவர் அண்மைக்காலமாக பட விழாக்களுக்கு வருவதில்லை.

நயன்தாராவின் இந்த வழக்கத்தை தமிழ் சினிமா ஏற்றுக்கொண்டது. ஆனால், தெலுங்கு திரையுலகமும் நயன்தாராவின் இந்த முடிவை கண்டு அதிர்ச்சி ஆனது. காரணம், அது மெகாஸ்டார் படம் என்பதால் மற்ற அனைவரும் வந்து விட்டனர். ஆனால், நயன்தாரா மட்டும் வராதது அவர்களை வெறுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.