ஜெ மரணம் தொடர்பாக இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. இதன் விசராணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதன்படி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களை விசாரணை கமிசன் வெளியிட மறுத்துள்ளது. விசாரணைக்கு தொந்தரவு வரும் என கூறி அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளது.

சம்மன் அனுப்பப்பட்டுள்ள இரு மருத்துவர்கள் நாளை தங்களது ஆய்வறிக்கையை நேரில் வந்து சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment