7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!சென்னை  வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for சென்னை வானிலை ஆய்வு மையம்

இது தொடர்பாக  சென்னை  வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் .நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியாக குமரி பகுதியில் நிலவுகிறது.அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது என்றும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment