8 வழிக்கு எதிர்ப்பு..!10 பேர் கைது..!300 போலிஸ் குவிப்பு..!பரபரப்பில் 8 வழி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related image

கடந்த சில தினங்களுக்கு முன்  உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்  நிலத்தை கையகப்படுத்த கருத்துச்கேட்க தேவையில்லை என்றும் 105வது சட்டப்பிரிவு செல்லும் என கூறி நிலத்தை கையகப்படுத்தலாம் என்று கூறி உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது.

Related image

இந்நிலையில் இந்த சாலைக்காக முன்பு அளவெடுக்க அதிகாரிகள் முற்பட்டபோது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது நிலத்தை அளக்க பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் அளவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Leave a Comment