50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இன்று அனைவரது கைகளிலுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் தவழ்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது மக்களை எளிதாக சென்று விடுகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மோசடி கும்பல்களிடம் சிக்கி பலர் ஏமாந்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுவாகவே காவல்துறை தரப்பில் தங்களது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் எந்த ஒரு லிங்கையும் நம்பி அதன் உள்ளே சென்று விடாதீர்கள் என்றும் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதையடுத்து இந்த போட்டியை காண 50 GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது என்ற செய்தி இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனை நம்பி பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும். எனவே இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை கண்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…