ஜம்முகாஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை..!

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் எல்ஓசியின் ஜுமகுண்ட் பகுதியில் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயங்கரவாதிகள் குறித்து கிடைத்த தகவலின் பெயரில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பகுதியில்  இருந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூன் 13 அன்று குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுடப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.