போரிஸ் ஜான்சன் அரசாங்கத்திலிருந்து மேலும் 5 அமைச்சர்கள் ராஜினாமா !

செவ்வாய்க்கிழமை மாலை முதல் ராஜினாமா செய்த டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 27 ஆக இருந்த நிலையில் , மேலும் ஐந்து இளைய அமைச்சர்கள் புதன்கிழமை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்திலிருந்து மொத்தமாக வெளியேறியுள்ளனர்.

“கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக, நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று நல்லெண்ணத்தில் நாங்கள் கேட்க வேண்டும்.”ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருந்து ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமடங்கு அதிகரித்து உள்ளதாக அவருக்கு இவ்வாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதே நாளில், மூன்று பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இருந்து அவரது தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ராஜினாமா செய்யும் எண்ணிக்கையில் இணைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment