தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4,68,513 பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4,68,513 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர் என்று  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது  செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.ஒரு சில தளர்வுகளுடன் மே 17-ஆம் தேதி வரை 3-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.இதனிடையே 4-ஆம் கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4 லட்சத்து 68 ஆயிரத்து 513 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை இதுவரை 4 லட்சத்து 41 ஆயிரத்து 888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 3 லட்சத்து 86 ஆயிரத்து 573 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 88 ஆயிரத்து 379 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.