ஜார்கண்டில் உள்ள காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வார்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாம்செட்பூர் நகரில் இருக்கும் டெல்கோ நகரில் அன்னை தெரசா நல அறக்கட்டளை என்ற காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் மேலாளராக ஹர்பல் சிங் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் வசித்து வரும் சிறுமிகள் பாலியல் தொல்லை காரணமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஜாம்செட்பூர் நகர எஸ்பி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையில், சிறுமிகளை பாலியல் தொல்லை செய்தது மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது போன்ற பல தீங்கான செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காப்பகத்தின் மேலாளர் ஹர்பல் சிங், அவரது மனைவி புஷ்பா திர்கி, வார்டன் கீதா தேவி உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பிரச்சனையால் இங்கு வசித்த சிறுமிகளை வேறு காப்பகத்திற்கு மாற்றியுள்ளனர். அந்நேரத்தில் இந்த காப்பகத்தில் இருந்த 2 சிறுமிகள் காணாமல் போய்விட்டனர். அதனால் தற்போது அந்த சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…