தோனியுடன் 15 ஆண்டுகள் நிறைவு; கொண்டாடும் சிஎஸ்கே.!

ஐபிஎல்இல் தோனி, சிஎஸ்கே அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் முடிந்ததை சிஎஸ்கே தனது ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு கொண்டாடியுள்ளது.

ஐபிஎல் 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு தலைமை வகித்து வரும் மகேந்திரசிங் தோனி, அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் தோனி கடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னையில் தான் எனது கடைசி ஆட்டம் இருக்கும், சென்னை ரசிகர்கள் மத்தியில் நன்றி கூறிவிட்டு தான் நான் விடைபெறுவேன் என கூறியிருந்தார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மார்ச் 31 இல் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. மேலும் சிஎஸ்கே அணி சென்னையில் தனது கடைசி ஆட்டத்தை மே 14 இல் விளையாடுகிறது.

இதனால் தோனிக்கு இது கடைசி ஆட்டமாக அமையும் பட்சத்தில் மே 14 அன்று சென்னையில் பிரிவு உபசார விழா நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தோனியை கவுரவிக்கும் விதமாக சிஎஸ்கே தனது ட்விட்டரில், தல எங்களது எல்லோவே(Yellove ) குடும்பத்தில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன, சிஎஸ்கேவின் பெருமை- தோனி என்று ட்வீட் செய்துள்ளது.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

14 mins ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

2 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

2 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

2 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

2 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

2 hours ago